Published : 24 Nov 2017 11:35 AM
Last Updated : 24 Nov 2017 11:35 AM

இரட்டை இலை சின்ன விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இரட்டை இலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தினகரன் கூறியதை அடுத்து, அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'இரட்டை இலை' சின்னமும் 'அதிமுக' என்ற கட்சியின் பெயரும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் நேற்று (வியாழக்கிழமை) அறிவித்தது. இதனால் ஆணையத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக சார்பாக ஓபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காப்பு மனுவாக அறியப்படும் கேவியட் மனு தாக்கல் செய்யட்டதால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்போது அவர்கள் தரப்பையும் அழைத்து விவரங்கள் கேட்க வேண்டும். அவர்களிடமும் உச்ச நீதிமன்றம் சார்பில் விசாரணை நடத்தப்படும்.

கேவியட் மனுவில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு விவரமும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சார்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனில் தங்களின் விளக்கத்தையும் கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஓபிஎஸ்.

ஒருவேளை தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை நிறுத்தி வைக்க கேவியட் மனு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x