Published : 26 Jul 2023 06:21 AM
Last Updated : 26 Jul 2023 06:21 AM

35 பயணிகளை ஏற்றாமல் சென்னையில் இருந்து அபுதாபிக்கு சென்ற விமானம்

சென்னை: அபுதாபியில் இருந்து சென்னைக்கு இரவு 7 மணிக்கு வரும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், மீண்டும் சென்னையில் இருந்து இரவு 7.45 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும். நேற்று முன்தினம் இரவு அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபி செல்வதற்கு 182 பயணிகள் காத்திருந்தனர்.

சென்னையில் பலத்த மழை பெய்ததால், விமானம் வருவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், சென்னையில் இருந்து நள்ளிரவு 12.18மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டது. விமானம் புறப்படுவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகாததால், 5 பெண்கள் உட்பட 35 பயணிகள் விமானத்தை தவறவிட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அந்த பயணிகள் அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதனால், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x