

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) 38-வது நிறுவன தினம் கடந்த 25-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் செபி தலைவர் துஹின் காந்த பாண்டே பேசியதாவது: இந்திய பங்குச் சந்தைகள் 5,900-க்கும் அதிமான பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் மற்றும் 14 கோடிக்கும் அதிகமான முதலீட்டாளர்களுடன் பிரம்மாண்டமான வளர்ச்சி அடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் சந்தை மூலதனம் ஆண்டுக்கு சராசரியாக 15% கூட்டு வளர்ச்சியைக் (CAGR) கண்டுள்ளது. அதேநேரம் மியூச்சுவல் ஃபண்ட் சொத்துகள் ஆண்டுதோறும் 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.