Last Updated : 10 Dec, 2022 06:34 AM

 

Published : 10 Dec 2022 06:34 AM
Last Updated : 10 Dec 2022 06:34 AM

ப்ரீமியம்
இயற்கை 24X7 - 33: காற்றாலையும் காடும்

அண்மையில் நீலக் குறிஞ்சிப் பூக்களைப் பார்ப்பதற்காகக் கேரளத்தில் உள்ள சதுரங்கப் பாறைக்குச் சென்றிருந்தேன். அதனருகில் காற்றாடி மெட்டு என்று ஓரிடம் இருப்பதாக அப்பகுதி நண்பர்கள் கூறினார்கள். பெயர் புதுமையாக இருக்கிறதே எனச் சென்று பார்த்தால் மலையுச்சியில் காற்றாலைகள் பொருத்தப்பட்டிருந்தன. புதுப்பிக்கத்தக்க எரியாற்றல்களில் காற்றாலை முதன்மையானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதை நிறுவும் இடங்கள் குறித்து நிறைய விமர்சனங்கள் உள்ளன.

காற்றாலை கேட்கும் பலி: மின் உற்பத்தியில் நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களில் ஓர் அலகு (யூனிட்) மின்சாரத்துக்கு 634 – 1,630 கிராம் வரை கார்பன் டை ஆக்சைடு வெளியாவதாகக் கணக்கீடு. அதுவே சூரியத் தகடு மின்சாரத்தில் 36-90 கிராம் கார்பன் வெளியாகிறது. காற்றாலைகள் எனில் 9-18 கிராம் என்பதால் புதுப்பிக்கத்தக்க எரியாற்றலில் காற்றாலை மின்சாரம் வரவேற்கக்கூடிய ஒன்றே. ஆனால், அதைக் காடுகளில் நிறுவுவது அடிப்படை நோக்கத்தையே கேலிக்கூத்தாகி விடுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x