Published : 03 Mar 2024 07:07 AM
Last Updated : 03 Mar 2024 07:07 AM
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ஞாயிறு சிறப்பிதழான ‘பெண் இன்று’ சார்பில், மகளிர் திருவிழா திருநெல்வேலி வண்ணார் பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரி அரங்கில் பிப்ரவரி 25 அன்று நடைபெற்றது. வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டெழுந்து வாழ்க்கையைத் துணிவோடு எதிர் கொள்ளும் உற்சாகம் வாசகியரின் முகத்தில் தெரிந்தது. காலை முதலே உற்சாகத்துடன் அரங்கில் ஒன்றுகூடினர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது பெரும்பாலான பெண்களுக்கு எட்டாக்கனியாக இருந்தாலும் அந்த ஞாயிற்றுக்கிழமையை திருநெல்வேலி பெண்கள், நம் ‘மகளிர் திருவிழா’வுக்காக மட்டுமல்ல, தங்களுக்கான ஒரு நாளாகவும் ஒதுக்கியிருந்தனர். விழா தொடங்கியது முதல் அரங்கைவிட்டுப் பரிசுகளோடு சென்றது வரை துளியும் சோர்வின்றித் துடிப்புடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT