Last Updated : 03 Sep, 2023 08:11 AM

 

Published : 03 Sep 2023 08:11 AM
Last Updated : 03 Sep 2023 08:11 AM

ப்ரீமியம்
பெண்கள் ஆண்கள் குழந்தைகள் - 14: நாங்கல்லாம் அந்தக் காலத்துல...

நம் வார்த்தைகளிலிருந்து கற்பதைவிட நம் செயல்களில் இருந்துதான் பிள்ளைகள் நிறைய கற்றுக்கொள்கிறார்கள் என்பதை வளர்ந்துவிட்ட நாமே புரிந்துகொள்ளவில்லை. நான் என் பிள்ளை முன்பு கணவரிடம் ஒரு பொய் சொல்கிறேன். ஆனால், அதே பிள்ளைக்குப் பொய் சொல்வது தவறென போதிக்கிறேன் என்றால் நான் பொய் சொல்பவள் மட்டுமல்ல; நான் ஏமாற்றுக்காரியும்கூட. இதைத்தானே என்னைப் பார்த்து வளரும் பிள்ளை கற்றுக்கொள்ளும்? பிள்ளைகள் நல்ல பிள்ளைகளாக உருவாகவேண்டும் என்கிற எண்ணம் நமக்கிருந்தால், நாம் முதலில் நல்லவிதமாக நடக்க வேண்டும். இதுதான் ஒரு நல்ல வளர்ப்புக்கு அடிப்படை.

எக்காரணம் கொண்டும் பிள்ளைகள் மனதில் எதற்காகவும் அச்சத்தை ஏற்படுத்தாமல் இருப்பது அவர்களுக்குத் தன்னம்பிக்கை வளரவும், மற்றவருக்குப் பயந்து பொய் சொல்லாமல் இருக்கவும், அவர்களை அவர்களாக வாழ்வைக்கவும் உதவும். சாமி கண்ணைக் குத்திடும் என்றோ, புளிய மரத்துல பேய் இருக்கு என்றோ சொல்லிச் சில காலம்தான் பிள்ளைகளை ஏமாற்ற முடியும். அப்பா திட்டுவார் அல்லது அடிப்பார் என்றோ டாக்டர் ஊசி போடுவார் என்றோ சொல்லி அப்போதைக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால், காலத்துக்கும் அது வேலை செய்யுமா?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x