Published : 07 Jun 2022 01:05 PM
Last Updated : 07 Jun 2022 01:05 PM

ப்ரீமியம்
மாதுளையின் விலைமதிப்பில்லா நலக்கூறுகள்

மாதுளையின் தோலை உரித்ததும் காட்சிதரும் கண்களைக் கவரும் சிவப்பு முத்துக்களைக் கைநிறைய அள்ளி மென்றாலே முத்துக்கள் கசிந்து சுவையை உணரச் செய்யும். மாதுளை தோல் என்னும் சிப்பிக்குள் வரிசைக்கிரமமாக அடுக்கப்பட்டிருக்கும் செந்நிற முத்துக்களின் நேர்த்தியை ரசிப்பதற்கு இருகண்கள் போதாது! வீடு தோறும் ஒரு மாதுளை செடியை வளர்க்க, குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் கட்டுக்குலையாமல் பாதுகாக்கப்படும்.

புனிதப் பொருளாகக் கருதப்பட்ட மாதுளை, புத்த மதத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பழங்களுள் ஒன்று! அவற்றின் பலன்களை அறிந்தாலே அதற்கான காரணம் புரியும். அனைத்து பருவங்களிலும் பழங்களை அள்ளி வழங்கும் 'கருணைத் தாவரம்' மாதுளையின் பூர்வீகம் மத்திய கிழக்கு நாடுகள். பல்வேறு நாடுகளில் மாதுளையை அடிப்படையாக வைத்து நிறையப் புராணக் கதைகள் வலம் வருகின்றன. கிரேக்க இலக்கியமான ஒடிசி, இலியட் காவியங்களில் மாதுளையின் பங்கு இருக்கிறது என்பது கூடுதல் செய்தி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x