Published : 03 May 2022 01:51 PM
Last Updated : 03 May 2022 01:51 PM

ப்ரீமியம்
பழச்சங்கிலியைக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள் பெற்றோர்களே!

நம்மோடு நெருங்கி உறவாடும் பழங்களை யாருக்குத் தான் பிடிக்காது. 'பழங்களைப் பிடிக்காதவர்கள் இப்பூவுலகில் உண்டோ…' என்ற கேள்வியை இக்காலத்தில் எழுப்பினால், பதில் என்னவாக இருக்கும்!... 'பிடிக்காதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்…' எனும் வருத்தம் தரக்கூடிய பதிலை நாம் கேட்டுத்தான் ஆக வேண்டும். பழங்களைப் பிடிக்காமல், அவற்றைச் சுவைக்காமல், அதிலிருந்து கிடைக்கும் சத்துகளை அனுபவிக்காமல் இருக்கும் மக்கள் நமது சமுதாயத்தில் நிறையவே இருக்கிறார்கள்! பழங்களோடு நமக்கிருந்த மரபு பிணைப்பு தற்போது கொஞ்சம் அறுபட்டதாகவே தோன்றுகிறது.

இப்போதைய தலைமுறையில் ஒரு முறை கூட மாதுளையின் சுவையை அறிந்திடாத மனிதர்களை நான் அறிவேன்! அத்திப் பழத்தின் துவர்ப்பை உணர்ந்திடாத ஆட்கள் எத்தனையோ பேர்! விளாம்பழமா… சப்புக் கொட்ட வேண்டிய பழத்தை, 'உவ்வே' என உச்சுக்கொட்டும் துரித மனிதர்கள் நிறையப் பேர்!... இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்! பழங்கள் சார்ந்த அடிப்படை விஷயங்களாவது மக்களுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா! நமது அன்றாட உணவியலில் பழங்கள் கட்டாயம் இடம் பிடிக்கும்படி மாற்றங்கள் நிகழ வேண்டும். பழங்களின் பலன்களை ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டும்!

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x