Published : 11 Jun 2023 08:28 AM
Last Updated : 11 Jun 2023 08:28 AM

ப்ரீமியம்
களம் புதிது: கனவைத் துரத்திய வேகப்புயல்!

இத்தாலியில் ஜூன் 2 அன்று நடைபெற்ற தடகளப் போட்டியில் 1,500 மீட்டர் தூரத்தை 3:49:11 நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்தார் கென்ய நாட்டு வீராங்கனை ஃபெயித் கெப்யெகன். பந்தய தூரத்தை அவர் கடந்தபோது பார்வையாளர்கள் மட்டுமல்லாமல் சக போட்டியாளர்களும் களத்திலேயே ஃபெயித்தின் சாதனையைக் கொண்டாடினர். சில நொடிகள் வித்தியாசத்தில் பதக்கத்தைத் தவறவிடும் இதுபோன்ற தடகள விளையாட்டில் போட்டியும் பொறாமையும் இன்றி வீராங்கனைகள் நடந்துகொண்டது நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.

ஃபெயித் (29), கென்யாவின் கெரிங்கெட் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் நாள்தோறும் நான்கு கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்குச் செல்வார். அந்த வயதிலேயே அவருக்குத் தடகளத்தின்மீது ஆர்வம் ஏற்பட்டு விட்டது. விளையாட்டுப் பின்னணி கொண்ட தந்தையின் வழிகாட்டுதல்படி பயிற்சி பெற்ற அவர், ஜூனியர் தொடர்களில் பங்கேற்கத் தொடங்கினார். 1,500 மீட்டர் ஓட்டத்தைத் தேர்வுசெய்து பயிற்சி மேற்கொண்டுப் பதக்கங்களைக் குவித்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x