Last Updated : 03 Jun, 2023 06:12 AM

 

Published : 03 Jun 2023 06:12 AM
Last Updated : 03 Jun 2023 06:12 AM

ப்ரீமியம்
செப்சிஸ்: ஆபத்தில் முடியும் அலட்சியம்

செப்சிஸ் என்பது ஒரு நோய்த்தொற்றுக்கு எதிராக உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் சரியாக வினையாற்றாத மருத்துவ அவசர நிலை. பொதுவாக உடலில் ஏற்படும் தொற்றை உடலின் நோயெதிர்ப்பாற்றல் அழித்துவிடும். ஆனால், செப்சிஸின்போது, உடலின் நோயெதிர்ப்பாற்றலுக்குக் கட்டுப்படாத தன்மையை நோய்த்தொற்று பெற்றுவிடுகிறது. இதன் காரணமாக, தொற்று தீவிரமடையும்; பரவல் வேகமெடுக்கும். இந்தப் பாதிப்பின்போது உடல் உறுப்புகளின் செயல்பாடும் மோசமடையும். இதற்கு உடனடி தீவிர மருத்துவ சிகிச்சை தேவை.

செப்சிஸ் பாதிப்பை உடனடியாகக் கவனிக்காவிட்டால், அது செப்டிக் ஷாக்காக வீரியமடையும். செப்டிக் ஷாக் என்பது செப்சிஸ் பாதிப்பின் கடுமையான நிலை; இறுதிக் கட்டமும்கூட. செப்டிக் ஷாக்கின்போது நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் சேதமடையும்; ரத்த அழுத்தமும் அபரிமிதமாகக் குறையும். இந்தப் பாதிப்பு கடுமையாகும்போது உயிரிழப்பும் ஏற்படலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x