Published : 04 Apr 2023 10:38 PM
Last Updated : 04 Apr 2023 10:38 PM

டெல்லி கேபிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் போட்டியை நேரில் கண்டு ரசித்த ரிஷப் பந்த்

டெல்லி: ஹோம் பிட்சில் டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடும் போட்டியை பார்வையிட்டு வருகிறார் ரிஷப் பந்த்.

டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 7-வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது டெல்லி கேபிடல்ஸ் அணி. இப்போட்டியில் ரிஷப் பந்த் டெல்லி கேபிடல்ஸ் அணியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

3 மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கிய, இந்திய அணி வீரர் ரிஷப் பந்த் படுகாயமடைந்தார். சிகிச்சைக்குப் பின்னர் காயங்கள் குணமாகி வருகின்றன. அவர் தொடர்ந்து ஓய்வில் இருக்கவேண்டும் என்றும், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளதால் வீட்டில் முழுநேர ஓய்வில் இருந்து வருகிறார்.

காலில் காயம் என்பதால் ஊன்றுகோல் உதவியுடன் நடந்து வரும் ரிஷப் இன்று டெல்லி மேட்சை பார்க்க வந்திருந்தார். அவருக்கு டெல்லி அணியின் உரிமையாளர்கள் மற்றும் பிசிசிஐ தலைவர் ஜெய் ஷா மற்றும் ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா ஆகியோர் வரவேற்பு கொடுத்தனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.

முன்னதாக, லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் ரிஷப் பந்த் தங்களுடன் எப்போதும் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் டெல்லி அணி, அவரின் ஜெர்சியை வீரர்கள் அமர்ந்திருக்கும் ஸ்டாண்டின் மீது மாட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x