Published : 11 Feb 2022 08:56 PM
Last Updated : 11 Feb 2022 08:56 PM

IND vs WI 3rd ODI | கடைசி நேரத்தில் ஒன் மேன் ஷோ காட்டிய மே.இ.தீவுகள் வீரர்... ஒயிட்வாஷ் செய்த இந்தியா!

குஜராத்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது இந்திய அணி. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர்.

266 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தமுறையும் ஓபனிங் செட் ஆகவில்லை. சாய் ஹோப் 5 ரன்களிலேயே சிராஜ் பந்துவீச்சில் எல்பிடபிள்யு மூலம் அவுட் ஆக, அவரைத் தொடர்ந்து மற்றொரு ஓபனர் 14 ரன்களில் தீபக் சஹார் பந்துவீச்சில் வெளியேறினார். இதன்பின் வந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் கேப்டன் பூரன் தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். கடந்த போட்டியை போல இந்தப் போட்டியையும் அதிரடியாக துவக்கிய பூரன் 34 ரன்கள் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் அவுட் ஆனார். இப்படி முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தாலும் கடைசிநேரத்தில் அந்த அணியின் டெயிலண்டர் பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் அல்ஜாரி ஜோசப் இருவரும், இந்திய பவுலர்களை சற்று பதறவைத்தனர்.

அதிலும், ஸ்மித் 18 பந்துகளே சந்தித்து 3 பவுண்டரி, 3 சிக்ஸ்ர்களை விளாசி 36 ரன்களை எடுத்தார். இன்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் சார்பில் அதிக ரன்கள் எடுத்த வீரரும் இவரே. மறுபுறம், ஜோசப் 29 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இறுதியில் 37.1 ஓவர்களுக்கு 169 ரன்கள் எடுப்பதற்குள்ளாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியை தழுவியது. 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி ஒருநாள் தொடரையும் 3 - 0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சிராஜ் தலா மூன்று விக்கெட்டுகளையும், சஹார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலமாக கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்தார். அவர் கேப்டனாக பணியாற்றிய கடந்த 13 போட்டிகளில் தொடர்ச்சியாக இது 11வது வெற்றியாகும். கோலி தொடர்ச்சியாக அதிகபட்சமாக 10 போட்டிகளை கேப்டனாக வென்றுகொடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x