Published : 29 Aug 2015 04:31 PM
Last Updated : 29 Aug 2015 04:31 PM
36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மகளிர் ஹாக்கி அணி 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்று சாதனை புரிந்துள்ளது.
லண்டனில் நடைபெறும் யூரோ ஹாக்கி சாம்பியன்ஷிப் அரையிறுதி போட்டிகளில் ஸ்பெயினை இங்கிலாந்து வீழ்த்த, நெதர்லாந்து அணி ஜெர்மனியை வீழ்த்த, இறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகள் ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற நிலையில் ஒரு அணிக்கு தகுதி பெற கிடைத்த வாய்ப்பை இந்திய மகளிர் ஹாக்கி அணி பெற்றுள்ளது.
கடந்த மாதம் பெல்ஜியம், ஆண்ட்வெர்ப்பில் நடந்த உலக ஹாக்கி லீக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி 5-வது இடத்தைப் பிடித்து ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றது.
இதனையடுத்து இந்திய மகளிர் ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றதை சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு இன்று உறுதி செய்தது.
தற்போது ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ள அணியுடன் இந்திய மகளிர் ஹாக்கி அணியும் இணைந்துள்ளது.
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் அணி கடைசியாக விளையாடி மரியாதைக்குரிய 4-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT