Last Updated : 05 Aug, 2015 09:47 AM

 

Published : 05 Aug 2015 09:47 AM
Last Updated : 05 Aug 2015 09:47 AM

9 ஆண்டுகளுக்குப் பிறகு சிட்டி ஓபனில் களமிறங்கிய முர்ரே

9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்கியிருக்கிறார் பிரிட்டனின் ஆன்டி முர்ரே.

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ் லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பயிற்சி போட்டியான சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடை பெற்று வருகிறது. இதில் கடைசி யாக 2006-ல் விளையாடிய முர்ரே, அதன்பிறகு பங்கேற்கவில்லை.

சமீப காலமாக பெரிய அளவில் சாம்பியன் பட்டம் வெல்லாத முர்ரே, அமெரிக்க ஓபனில் சிறப்பாக ஆடுவதற்காக சிட்டி ஓபனில் விளையாட முடிவு செய்துள்ளார். 4 மாதங்களுக்குப் பிறகு ஹார்ட் கோர்ட்டில் முர்ரே விளையாடவுள்ள முதல் போட்டி இது.

இந்தப் போட்டியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருக்கும் முர்ரே, முதல் சுற்றில் பை பெற்றிருக்கிறார். அதனால் அவர் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்குகிறார். இன்று நடைபெறும் 2-வது சுற்றில் பெஞ்சமின் பெக்கர் அல்லது டெய்முரஸ் கபாஸ்வில்லை சந்திக்க உள்ளார் முர்ரே.

இது தொடர்பாக முர்ரே கூறியதாவது: கிராஸ் கோர்ட்டில் விளையாடிவிட்டு இங்கு வந்திருக்கிறேன். எனவே இங்கு சிறப்பாக ஆட காலஅவகாசம் தேவை. இன்று (நேற்று) காலையில்தான் இங்கு பயிற்சி பெற்றேன். அப்போது நன்றாக ஆடுவது போன்று உணர்ந்தேன். விம்பிள்டனுடன் ஒப்பிடும்போது இங்குள்ள சூழல் முற்றிலும் வித்தியாசமானது. இங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது. இங்கு பந்துகள் எகிறி வரும்” என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x