Published : 16 Aug 2017 05:09 PM
Last Updated : 16 Aug 2017 05:09 PM
இந்தியாவுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி பல சாதனைகளை படைத்துள்ளது என்று முன்னாள் இலங்கை வீரர் ரஸ்ஸில் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
பல்லகிலேயில் நடைபெற்ற 3வது, இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்களுக்குச் சுருண்டு இன்னிங்ஸ் மற்றும் 171 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணி முதல் முறையாக அயல்நாட்டுத் தொடரில் 3-0 என்று எதிரணியினரை ஒயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர் நியூஸிலாந்தில் 1967-68 தொடரில் இந்திய அணி நியூஸிலாந்தை, நியூஸியில் 3-1 என்று வெற்றி பெற்றபோது ஒரு தொடரில் 3 டெஸ்ட்களை வென்றிருந்தது. தற்போது இது 2-ம் முறை. ஆனால் இது ஒயிட்வாஷ் என்பது சாதனையாகும்.
இதனையடுத்து விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்திய அணியிடம் படுதோல்வி கண்ட இலங்கை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கு அந்நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஸ்ஸில் அர்னால்ட் ஆறுதலான ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “இந்திய அணிக்கு எதிராக இலங்கை ஒரு நாள் போட்டிகளில் கடந்த 30 மாதங்களில் 100 சதவீத சாதனைகளை கொண்டுள்ளது. எவ்வளவு அழகானவை அவை... ”என்று பதிவிட்டுள்ளார்.
அர்னாட்டின் இந்த பதிவுக்கு கீழ் இந்திய அணி ரசிகர்கள் பலரும் அவர்களது பானியில் நகைச்சுவையாக பதில் பதிவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT