Published : 17 Aug 2017 10:05 AM
Last Updated : 17 Aug 2017 10:05 AM
பல்கேரிய ஓபன் பாட்மிண்டன் தொடரின் அரை இறுதிக்கு இந்திய வீரர் லக்ஷயா சென் முன்னேறினார்.
பல்கேரியாவின் சோபியா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென், போலந்தின் மைக்கேல் ரோகல்ஸ்கியை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 20-22, 21-18, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரை இறுதியில் லக்ஷயா சென், இலங்கையின் தினுகா கருணாரத்னாவை எதிர்த்து விளையாடுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் வைஷ்ணவி ரெட்டி 21-16, 17-21, 17-21 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் மரியா டெல்செவாவிடம் தோல்வியடைந்து அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT