Published : 24 Jun 2016 04:22 PM
Last Updated : 24 Jun 2016 04:22 PM
ஆண்டின் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. இது ‘மினி ஐபிஎல்’ அல்லது ‘ஐபிஎல் ஓவர்சீஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் மாதம் நடக்கும் ஐபிஎல் தொடர் போல் அல்லாமல் குறைந்த போட்டிகள் கொண்டதாக இருக்கும் என்றும் 2 வாரங்களில் போட்டிகளை நடத்தி முடிப்போம் என்றும் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தற்போது பங்கேற்று விளையாடும் 8 அணிகளும் இதில் பங்கேற்கும். இந்தத் தொடர் அயல்நாட்டில் நடைபெறும். அமெரிக்கா, அல்லது யு.ஏ.இ.யில் இந்த மினி ஐபிஎல் தொடர் நடைபெறலாம்.
இன்று தரம்சலாவில் நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் இன்னொரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அண்டர் 19 வீரர் ஒருவர் அண்டர் 19 உலகக்கோப்பையில் ஒருமுறையே ஆட முடியும், அண்டர் 19 கிரிக்கெட் தொடர்களில் இருமுறையே ஒரு வீரர் ஆட முடியும்.
அதேபோல் சையத் முஷ்டாக் அலி டி20 உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்குப் பதிலாக மண்டல அணிகள் அடிப்படையிலான டி20 தொடர் நடத்தப்படவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT