Published : 12 Jun 2017 07:38 PM
Last Updated : 12 Jun 2017 07:38 PM
அனில் கும்ப்ளே ஒப்புக் கொண்டால் மே.இ.தீவுகள் தொடருக்கும் அவரே இந்திய அணியின் பயிற்சியாளராக நீடிப்பார் என்று கிரிக்கெட் நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
“பயிற்சியாளர் தேர்வு ‘கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டி’யின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கமிட்டி அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமித்தது. இப்போது இதே நடைமுறைதான் கடைபிடிக்கப்படும், ஆனால் பயிற்சியாளர் தேர்வு நடைமுறை தாமதமாகியுள்ளதால் கும்ப்ளே ஏற்புக்கேற்றபடி அவரே இந்திய அணியின் பயிற்சியாளராக மே.இ.தீவுகள் தொடருக்கும் நீடிப்பார்” என்றார்.
ஜூன் 23-ம் தேதி முதல் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்காக இந்தியா மே.இ.தீவுகள் செல்கிறது. ஜூலை 9-ம் தேதி ஒரேயொரு டி20 போட்டி உள்ளது.
இந்நிலையில் கும்ப்ளே, கோலி மோதல் குறித்து குறிப்பிட்ட வினோத் ராய், “ஏன் இந்த சர்ச்சை என்று எனக்குத் தெரியவில்லை, நான் இருவரிடமும் பேசினேன், இருவருமே வெளிவந்த செய்திகளை உறுதி செய்யவில்லை” என்றார்.
சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு தற்போது லண்டனில் உள்ளது, இவர்கள் கும்ப்ளே மற்றும் கோலியிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அனில் கும்ப்ளேவே தொடர இந்த மூவரும் விரும்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT