Last Updated : 13 Aug, 2016 10:00 AM

 

Published : 13 Aug 2016 10:00 AM
Last Updated : 13 Aug 2016 10:00 AM

விதிமுறைகளை மீறவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

ரியோ ஒலிம்பிக் நகரத்தில் தான் விதிமுறைகளை மீறி நடந்துகொள்ளவில்லை என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியின் காண்டினெண்டல் மேலாளரான சாரா பீட்டர்சன் நேற்று முன்தினம் இந்திய ஒலிம்பிக் குழுவின் தலைவர் ராகேஷ் குப்தாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில், விஜய் கோயல் ரியோ ஒலிம்பிக் விதிமுறைகளை மீறி நடந்து கொள்வதாகவும் அங்கீகாரம் பெறாத நபர்களை அழைத்துக்கொண்டு பாதுகாக்கப் பட்ட பகுதிக்குள் செல்ல முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்ந் தால் அவரது அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக் கப்பட்டிருந்தது. இந்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மத்திய அமைச்சர் விஜய் கோயல் மறுத் துள்ளார். இதுகுறித்து நிருபர் களிடம் கூறிய விஜய் கோயல், “என் மீது புகார் கூறும் கடிதத்தை எழுதியவர் யார் என்றோ, ஒலிம்பிக் அமைப்பில் அவருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்றோ எனக்குத் தெரியாது. இந்த கடிதத் தில் குறிப்பிட்டுள்ளபடி எந்த விதிமீறலிலும் நான் ஈடுபட வில்லை.

இந்திய அணி ஹாக்கி போட்டியில் ஆடியபோது அவர்களை உற்சாகப்படுத்தவே நான் ஆடுகளத்துக்குள் சென்றேன். நான் முதலில் ஆடு களத்துக்கு சென்றபோது அங்கி ருந்தவர்கள் என்னிடம் போட்டி அமைப்பாளர்கள் வழங்கிய அடை யாள அட்டையை காட்டுமாறு கூறினார்கள். இதைத் தொடர்ந்து நான் அடுத்த முறை அடையாள அட்டையுடன் சென்றேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அதை என்னிடம் நேரடியாக கூறியி ருக்கலாம். அதை விட்டுவிட்டு இந்திய குழுவின் தலைவருக்கு புகார் கடிதம் அனுப்பியிருக்க கூடாது. மொழிப்பிரச்சினை காரண மாகக் கூட அவர்கள் என்னைத் தவறாக புரிந்துகொண்டி ருக்கலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x