Published : 05 Apr 2019 09:43 AM
Last Updated : 05 Apr 2019 09:43 AM
சூப்பர் கோப்பை கால்பந்தில் சென்னை சிட்டி அணி அரை இறுதிக்கு முன்னேறியது.
புவனேஷ்வரில் நடைபெற்று வரும் சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் நேற்று ஐஎஸ்எல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணியும், ஐ லீக் கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சிட்டி அணியும் மோதின.
15-வது நிமிடத்தில் தாரிப் அகந்திடம் இருந்து பந்தை பெற்ற நெஸ்டர் கோர்டிலோ அற்புதமாக கோல் அடிக்க சென்னை சிட்டி அணி 1-0 என முன்னிலை பெற்றது. முதல் பாதியில் பெங்களூரு அணி போராடிய போதும் பதிலடி கொடுக்க முடியாமல் போனது. 2-வது பாதி ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் சென்னை சிட்டி அணி தனது 2-வது கோலை அடித்தது.
இந்தே கோலை பெட்ரோ மான்ஸி அடித்தார். இதனால் சென்னை சிட்டி அணி 2-0 என முன்னிலை பெற்றது. 65-வது நிமிடத்தில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான சுனில் சேத்ரி, தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.
எனினும் அந்த அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் சென்னை சிட்டி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT