Published : 18 Jan 2019 06:38 PM
Last Updated : 18 Jan 2019 06:38 PM
தோனிக்கு இது மற்றொரு நாள் என்று இந்திய சுழற் பந்துவீச்சாளர் ரவி சந்திரன் அஸ்வின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாஹல் 6 விக்கெட்களை வீழ்த்தினார். கடைசி வரை ஆட்டமிழக்கமல் இருந்த தோனி மற்றுன் கெதர் ஜாதவ் ஆகியோர் இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில், சிறப்பாக விளையாடிய வீரருக்கான விருது தோனிக்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் தோனி அரை சதத்தை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தோனியின் பேட்டிங் குறித்து ரவிசந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ தோனிக்கு இது மற்றொரு நாள்... கடைசியில் ஆட்டத்தை வெற்றியாக முடிப்பதற்காகவே தோனி பிறந்திருக்கிறார்.” என்று பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த தொடரில், சிறப்பாக விளையாடிய வீரருக்கான விருது தோனிக்கு வழங்கப்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் தோனி அரை சதத்தை கடந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT