Published : 08 Nov 2017 10:54 AM
Last Updated : 08 Nov 2017 10:54 AM

குற்றாலத்தில் குளிக்க தடை நீங்கியது

நெல்லை, தூத்துக்குடி, கன்யாகுமரி ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒருவாரமாக மழை வெளுத்து வாங்கியது.

இதனால், நெல்லை மாவட்டம் குற்றாலத்தில்  நீர்வரத்து அதிகரித்து அருவியில்  நீர் ஆர்ப்பரித்து வந்தது. இதனால், மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தற்போது, மழை குறைந்து, நீர் வரத்தும் குறையவே, இன்று முதல் மெயின் அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

நான்கு நாட்களாக  இருந்த தடை நீக்கப்பட்டதால், இப்போது குற்றாலம் அருவியில் உற்சாகக் குளியல் போடுகின்றனர் பொதுமக்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x