Published : 31 Jul 2023 08:30 AM
Last Updated : 31 Jul 2023 08:30 AM

ஆஷஸ் 5-வது டெஸ்ட் | ஆஸி. வெற்றிக்கு 384 ரன்கள் இலக்கு

கவாஜா மற்றும் வார்னர்

லண்டன்: இங்கிலாந்துடனான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற 384 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி இந்த டெஸ்ட் போட்டி தொடங்கியது. இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 283 ரன்களும், ஆஸ்திரேலியா 295 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற 3-ம் நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்திருந்தது. 4-ம் நாள் ஆட்டத்தை ஆண்டர்சன் 8 ரன்களுடனும், ஸ்டூவர்ட் பிராட் 2 ரன்களுடனும் தொடங்கினர். ஆண்டர்சன் மேலும் ஏதும் ரன் சேர்க்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து 395 ரன்களுக்கு இங்கிலாந்தின் 2-ம் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸை விளையாடியது.

விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டேவிட் வார்னர் 58, உஸ்மான் கவாஜா 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. அணியின் வெற்றிக்கு 249 ரன்கள் தேவைப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x