Published : 31 Jul 2023 06:21 AM
Last Updated : 31 Jul 2023 06:21 AM

ப்ரீமியம்
குறையட்டும் பொதுமக்களின் ஆவணச் சுமை

மக்களவையில் ஜூலை 26 அன்று தாக்கல் செய்யப்பட்ட, ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுத் திருத்த மசோதா 2023’ நாட்டில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் டிஜிட்டல் வடிவிலான பிறப்புச் சான்றிதழை வழங்குவதற்கு வழிவகுக்கிறது. கல்வி நிலையங்களில் சேர்க்கை, வாகன ஓட்டுநர் உரிமம், அரசு வேலைகள், ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, திருமணப் பதிவுச் சான்றிதழ் எனப் பல்வேறு அரசு ஆவணங்களையும் சேவைகளையும் பெறுவதற்கான சான்றாக இந்த டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்த முடியும் என்பது வரவேற்புக்குரியது.

இந்தியாவில் பிறப்பு-இறப்புகளையும் அவை தொடர்பான பிற விவகாரங்களையும் பதிவுசெய்து முறைப்படுத்த, ‘பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம்’ 1969இல் இயற்றப்பட்டது. இப்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மசோதாவின் மூலமாகத்தான், இந்தச் சட்டத்தில் முதல் முறையாகத் திருத்தம் மேற்கொள்ளப்படவிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x