Last Updated : 03 Sep, 2017 12:02 PM

 

Published : 03 Sep 2017 12:02 PM
Last Updated : 03 Sep 2017 12:02 PM

வீடெல்லாம் மணக்கும் ஓணம்: ஓலன்

என்னென்ன தேவை?

மஞ்சள் பூசணித் துண்டுகள் - ஒரு கப் பச்சை மிளகாய் - மூன்று (நீளவாக்கில் நறுக்கியது)

தேங்காய்த் துருவல் – ஒரு கப்

சீரகம் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

கடுகு - அரை டீஸ்பூன்

உப்பு – ருசிக்கேற்ப

தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

 

எப்படிச்செய்வது?

பூசணிக்காயைத் தோல் சீவி, விதை நீக்கி ஒரு அங்குல துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காயில் பால்விட்டு அரைத்து முதல் பால் எடுங்கள். பிறகு மீண்டும் சிறிது தண்ணீர் விட்டு அரைத்து இரண்டாவது பால் எடுங்கள். பூசணித் துண்டுகளை இரண்டாவது தேங்காய்ப் பாலில் வேகவிட்டு எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டுத் தாளியுங்கள். கீறிய பச்சை மிளகாயை, கறிவேப்பிலை சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த பூசணிக்காயைப் போட்டு முதல் தேங்காய்ப் பாலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். கலவையின் மேல் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு மூடிவைத்துப் பிறகு பரிமாறுங்கள்.

மஞ்சள் பூசணிக்குப் பதில் வெள்ளைப் பூசணியையும் பயன்படுத்தலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x