Last Updated : 05 Oct, 2015 01:09 PM

 

Published : 05 Oct 2015 01:09 PM
Last Updated : 05 Oct 2015 01:09 PM

மரவள்ளி குருமா

என்னென்ன தேவை?

மெலிதாக நறுக்கிய மரவள்ளி - அரை கப்

வெங்காயம் - 1

பூண்டு - 3 பல்

மெலிதாக நறுக்கிய கேரட் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்

அரைக்க

தேங்காயத் துருவல் - கால் கப்

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரித் துண்டுகள் - 4

எப்படிச் செய்வது?

அடி கனமான பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, கேரட் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பிறகு மரவள்ளியைச் சேர்த்து வதக்கி, உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சிறிது தண்ணீர் ஊற்றிக் கெட்டியாக அரையுங்கள். கொதிக்கும் கலவை வெந்ததும் அரைத்த விழுது, கரம் மசாலா சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவைத்து மல்லித்தழை தூவி அலங்கரியுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x