Published : 01 Mar 2016 10:32 AM
Last Updated : 01 Mar 2016 10:32 AM

எழுத்தாளரும் சினிமாவும்

‘விஜய், அஜித் படங்களும் ‘விசாரணை'யும் ஒன்றே: எழுத்தாளர் சாரு நிவேதிதா’ என்ற செய்தியைப் படித்தேன். இப்போது வெளிவருகின்ற படங்களுடன் ஒப்பிடும் போது, விசாரணை ஆகச் சிறந்த படம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஆனால், குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்க வேண்டும் என்று எழுத்தாளர்கள் நினைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

- முத்துச்சாமி, ராமநாதபுரம்.



மகாமகம் செய்திகள் சிறப்பு!

கும்பகோணம் மகாமகம் குறித்த செய்திகளை, விழாவின் முக்கியத்துவம், வரலாறு, பலன்கள் குறித்து விரிவாக, ஒரு தொடர்போல வெளியிட்ட ‘தி இந்து’வின் பணி சிறப்பாக இருந்தது. விழா ஏற்பாடுகளில் இருந்த நிறைகளைப் பாராட்டிய அதே தருணத்தில், குறைகளைச் சுட்டிக் காட்டிய விதமும் நயமானது.

- வெ. சுப்பிரமணியன், கோவை. உங்கள்குரல் வழியாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x