Published : 22 Feb 2016 09:40 AM
Last Updated : 22 Feb 2016 09:40 AM

வாளியில் குளிப்போம்

‘வாழ்வு இனிது’ பகுதியில் வெளிவந்துள்ள தண்ணீரைக் காப்போம் புகைப்பட ஆல்பம் குடிநீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தியது. தண்ணீரை எவ்வாறெல்லாம் வீணடிக்கிறோம் என்பதைச் சொல்லியதோடு அல்லாமல் கிராமப்புற மக்கள் குடிநீருக்காக அலையும் அவலத்தையும் படங்கள் உணர்த்தின. இனிமேல் எங்கள் வீட்டில் ஷவரில் குளிப்பதை நிறுத்திவிட்டு, வாளியில் தண்ணீர் பிடித்துக் குளிப்பதாக முடிவுசெய்திருக்கிறோம். நேரமும் தண்ணீரும் மிச்சமாகுமல்லவா?

- ரா. பொன்முத்தையா, தூத்துக்குடி.



செல் சதுரங்க வேட்டை

ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால், அவர்களது ஆசையைத் தூண்ட வேண்டும் என்பது ‘சதுரங்க வேட்டை’ படத்தில் வந்த வசனம். ‘ப்ரீடம் 251’ செல்போன் குறித்த அறிவிப்பும், அதனை ஆன்லைனில் வாங்க முயன்றபோது இணையதளமே முடங்கியதும் அந்தப் படத்தைத்தான் ஞாபகப்படுத்துகின்றன.

- நெல்சன், ‘தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x