Published : 31 Oct 2015 11:20 AM
Last Updated : 31 Oct 2015 11:20 AM

இளைத்ததும் வாழும் குதிரைக்காரர்

சுப்பிரமணி பற்றிய ‘ஒரு பொழப்பு பல வயிறு’ கட்டுரை அருமை. "அந்தச் சூறாவளியில் ஓர் சடலம் சுழன்று திரிந்து அலைக்கழிகிறது… அதுதான் பிழைக்கப் போனவனின் கதி"! என்ற ஜெயகாந்தனின் வரிகளுக்கு பொருள் உணரும்படி வாழ்கிறார் சுப்பிரமணி. குதிரை வண்டிக்காரர் முன்னே சென்றால், காரில் வருபவர்கள் ஒலி எழுப்பி அலுத்துக்கொள்கிறார்கள்.

தானும் வாழ்ந்து இன்னொரு ஜீவனையும் வாழவைத்துக்கொண்டிருக்கும் சுப்பிரமணி போன்றோரின் வாழ்க்கை அவர்களுக்குப் புரியுமா? குதிரை வண்டிக்காரருக்கு நேர்கின்ற கதிதான் மாட்டு வண்டிக்காரருக்கும். குதிரைக்கு ஆட்டோ என்றால், மாட்டு வண்டிகளுக்கு லோடு ஆட்டோ. இப்படிப் பிழைத்துக் கொண்டிருப் பவர்களைத்தான் நாம் இன்னும் பிழைக்கத்தெரியாத ஆள் எனப் பட்டம் கொடுத்துக் கொண்டிருக் கிறோம். வலுத்தது மட்டும் வாழும் என்ற விதியில் இளைத்ததும் வாழும் என்பதற்கு உதாரணம்தான் குதிரைக் காரர் சுப்பிரமணி.

- ப.மணிகண்டபிரபு, ஆசிரியர், திருப்பூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x