Published : 09 Oct 2015 10:51 AM
Last Updated : 09 Oct 2015 10:51 AM

‘நோப்பாள’த்தின் பின்னணி!

புதன்கிழமை அன்று வெளியான ‘நேபாளத்தில் ஏன் நோப்பாளம்?’ கட்டுரை, நமது அண்டை நாடான நேபாளத்தின் தற்போதையை நிலையை, வரலாற்றுப் பின்னணியுடன் அலசியிருக்கிறது.

புதிய அரசியல் சட்டம் தொடர்பாக அந்நாட்டில் எழுந்திருக்கும் சர்ச்சையின் பின்னணியில் இந்தியாவும் இருப்பதாகவே அந்நாட்டு ஊடகங்கள் விமர்சிக்கின்றன.

இந்நிலையில், இந்தியாவுடன் நெருங்கிய உறவு கொண்ட மாதேசிகள் புதிய அரசியல் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணங்கள், இந்தியாவின் தலையீடு பற்றிய நேபாளிகளின் எதிர்ப்பின் பின்னால் உள்ள காரணங்கள் என்று முக்கியமான விஷயங்களை இக்கட்டுரை பதிவு செய்திருக்கிறது. தவிர, ‘நோப்பாளம்’ எனும் வார்த்தையை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகமும் செய்திருக்கிறார் கட்டுரையாளர்.

- ஆர். சிவக்குமார், சேலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x