Published : 25 Sep 2015 10:51 AM
Last Updated : 25 Sep 2015 10:51 AM
விஷ்ணுபிரியா சம்பவத்தின் பின்னணியில் பல்வேறு வடிவில் சாதியம் இருக்கிறது. கடினமாக, நேர்மையாக உழைத்து உயர் அதிகாரி என்ற நிலையை அடைந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதியினர், பெண் எனச் சொல்லிச் சொல்லியே ஆதிக்கம் செலுத்தும் நிலை இன்றும் நடக்கிறது என்பதற்கு அவர் மரணமே சாட்சி. தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கனவுக்கு விடப்பட்ட சாதிய ஆணாதிக்கச் சவால் இது என்றே சொல்ல வேண்டும்.
- இல.ஜெகதீஷ், கிருஷ்ணகிரி.
சமீப காலங்களில் நேர்மையாகச் செயல்படும் அதிகாரிகளின் துயரமான மரணத்துக்கு ஊழலும், சாதியமும்தான் காரணமாக இருக்கின்றது என்றால், நாம் எவ்வளவு வேகமாகப் பின்னோக்கி ஓடுகிறோம் என்பதை உணர வேண்டும். இதை எல்லாம் பொதுச் சமூகம் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால் பாதிக்கப்படப்போவது நாம்தான்.
தன் தோழியின் மரணத்துக்காக நியாயம் கேட்கும் டிஎஸ்பி மகேஸ்வரி போல் துணிச்சலாக கருத்து சொல்பவர்களுக்கு, நியாயத்துக்காகப் போராடுபவர்களுக்கு இனி நாம் எந்த விதத்தில் ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கப்போகிறோம்?
- சு.ஜெகதீசன், அம்பை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT