Published : 27 Aug 2015 10:29 AM
Last Updated : 27 Aug 2015 10:29 AM
சென்ற ஆண்டு மவுலிவாக்கம் கட்டிடம் தரைமட்டமானது தொடர்பாக ரகுபதி கமிஷன் அறிக்கை கூறும் தகவல்களைப் படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது.
தூண்கள் எழுப்புவதில்கூடவா தகிடுதத்தம் செய்வார்கள்? ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள், நேரடியாக மக்கள் வசிப்பிடத்தை உருவாக்கித்தரும் பொறுப்பில் இருப்பவர்கள். குறைந்த செலவில் வீடுகட்டி, அதிக லாபத்துக்கு விற்கும் ‘கொள்ளை நடைமுறை’ இன்று சகஜமாகிவிட்டது. இவர்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது ஒரு புறம் இருக்க… உயிரையே பறிக்கும் அளவுக்கு ஊழல் செய்வதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- ராதிகா,இணையம் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT