Published : 27 Aug 2015 10:30 AM
Last Updated : 27 Aug 2015 10:30 AM
வே முத்துக்குமாரின் ‘வண்ணதாசன் வரைந்த சித்திரங்கள்’ கட்டுரை, மெல்லுணர்வைக் கொண்டாடும் அருமையான எழுத்தோவியம்.
கதைகளுக்குள் அலைபாயும் கவிதை விவரிப்புகள், கவிதை வரிகளுக்கு அப்பால் விரியும் சிறுகதைகள் என்பதாகவே தொடர்கிறேன் அவரது எழுத்துக்களை. ‘ஞாபகம்’ என்ற அவரது சிறுகதையில், பித்தளை டிரம் குழாயிலிருந்து டம்ளரில் பிடிக்கும் தண்ணீரைக்கூட திரித்திரியாகக் களகளக்கிற தண்ணீர் என்று வர்ணித்திருப்பார்.
‘நடேசக் கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும்’ ஆத்தாடி... ஆத்தாடி… படித்து அப்படி உருகிப்போனேன். திருமண வரவேற்பில் நாகஸ்வர இசையை ரசித்து அந்தக் கலைஞரைப் போய்ப் பாராட்டும் மணமகன் பாத்திரத்தை வாசித்து, அதன் பிறகு திருமண வரவேற்பிலோ, சின்னஞ்சிறு கோயில் நிகழ்ச்சியிலோ ரசித்துக் கேட்க நேரும் எந்த நாகஸ்வரக் கலைஞரிடமும் அந்தக் கதை பற்றிச் சொல்லாமல் நான் மீள்வதே இல்லை.
- எஸ்.வி.வேணுகோபாலன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT