Published : 15 Jul 2015 10:50 AM
Last Updated : 15 Jul 2015 10:50 AM

தினமும் பள்ளிகளில் பால்

முன்பு பால் என்பது விற்பனை செய்யும் உற்பத்திப் பொருளாக இல்லாமல், உணவுப் பொருளாக இருந்தது.

ஆடு, மாடு, பசு போன்றவற்றைத் தங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்துப் பாரமரித்துவந்தனர்.

பாலுக்காக அவற்றை நோகடிக்காமல், தடவிக்கொடுத்து கன்றுக்குத் தேவையான பாலைக் குடிக்கச்செய்து, மீதியைக் கையால் தனது வீட்டுத் தேவைக்கு கறந்தனர்.

இன்று சம்பாத்தியத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, நவீன இயந்திரங்கள் மூலம் ரத்தம் வரும்வரை பால் உறிஞ்சப் படுகிறது. அரசு கூடுதல் பால் கொள்முதலை, பள்ளிகளில் முட்டைகள் வழங்குவதுபோல், தினமும் பள்ளிகளில் பால் வழங்க முன்வந்தால் பிரச்சினை ஓரளவு குறைய வாய்ப்புள்ளது.

- மு.க. இப்ராஹிம்,வேம்பார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x