Published : 23 Jul 2015 10:47 AM
Last Updated : 23 Jul 2015 10:47 AM
‘கருத்துப் பேழை’ பகுதியில் 'தற்கொலைகளைக் குறைக்க அதிரடி வழி; மோடி மந்திரம்' கட்டுரை படித்தேன்.
விவசாயிகள் தற்கொலை குறைந்துவிட்டதாகக் காட்டும் மோடி அரசின் செயலைப் பார்க்கும்போது `பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகமெல்லாம் இருட்டு' என்ற கிராமத்துப் பழமொழியே நினைவுக்குவந்தது.
ஆக்கபூர்வமான நடவடிக்கைகளால் விவசாயிகளின் தற்கொலையைக் குறைத்திருந்தால்தான், மக்களுக்கு அரசு மீது நம்பிக்கை வரும்.
திட்டமிட்டு நேர்மையற்ற வழியில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது சரியான தீர்வாக இருக்காது.
- ச. கிறிஸ்து ஞான வள்ளுவன்,வேம்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT