Published : 22 Jul 2015 10:42 AM
Last Updated : 22 Jul 2015 10:42 AM
‘இது நிரந்தரம் அல்ல!’ தலையங்கம் படித்தேன். தொன்மைச் சிறப்புவாய்ந்த கிரேக்க நாட்டுக்கு நேர்ந்த இந்நிலை வருந்தத்தக்கது.
அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் தராமல், ஆடம்பரமான வாழ்க்கை, அத்துமீறிய செலவுகள் போன்றவற்றில் நாட்டம் கொண்டது;
சேமிக்கும் பழக்கம் இல்லாமை போன்றவைதான் இந்நிலைக்குக் காரணம். பொருளாதார நெருக்கடியால், முதியோர்கள் பெற்றுவந்த ஓய்வூதியப் பலன்கள் நிறுத்திவைக்கப்பட்டும், விலைவாசி உயர்ந்தும், மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாம் உலகப் போரால் முற்றிலும் சாம்பல் குவியலாக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டுவந்த ஜப்பானின் மன உறுதி தற்போது கிரேக்க மக்களுக்குத் தேவை.
- அ. மயில்சாமி, தமிழாசிரியர், கண்ணம்பாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT