Published : 27 Jul 2015 10:38 AM
Last Updated : 27 Jul 2015 10:38 AM

வள்ளுவர் வழியில் வாழ்வோம்

தமிழகத்தில் மது புரண்ட வரலாறு கட்டுரை, மதுவிலக்கின் வரலாற்றைத் தெளிவாக நமக்கு விளக்கியது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் மது விற்பனையில் நம் தமிழகம் முதலிடம் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்ல; சிறுமைக்குரிய விஷயம்!

சங்க காலத்தில் மது குடித்த நம் முன்னோர்களின் வரலாறு நமக்குத் தெரியும். அறிவையும் உணர்வையும் அழிக்கும் கள்ளைக் குடிக்காதே என்று நம் முன்னோர்கள் செய்த தவற்றைச் சுட்டிக் காட்டிக் குறள் வழியாக அறிவுரை செய்த பெருந்தகை வள்ளுவர். அவர் வழியில் வாழ வகைப்படுவோம்!

- இரா. தீத்தாரப்பன்,மேலகரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x