Published : 05 Jun 2022 09:50 AM
Last Updated : 05 Jun 2022 09:50 AM

ப்ரீமியம்
வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு வழிமுறைதான் வரலாற்று ஆய்வு: ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

தன் பள்ளிப் பருவத்திலிருந்தே ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வ.உ.சி. மேல் பெரிய ஈர்ப்பு. வ.உ.சி.யின் கடிதங்களைத் தேடித் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டுவந்தபோது, அவருக்கு வயது 17. வ.உ.சி. மீதான அவரது ஆய்வு தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த ஆய்வுக்கு இட்டுச்சென்றது. 19-ம் நூற்றாண்டு தொடங்கி 20-ம் நூற்றாண்டின் பாதி வரையிலான தமிழ்ச் சூழல்தான் சலபதியின் ஆய்வுக் களம். வ.உ.சி, பாரதி, புதுமைப்பித்தன், உ.வே.சா, எஸ்.ஜி.இராமாநுஜலு நாயுடு, ஏ.கே.செட்டியார் என, சென்ற நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளின் பரிமாணங்களை ஆவணப்படுத்தியுள்ளார். ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை’, ‘ஆஷ் அடிச்சுவட்டில்,’ ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’, ‘Who Owns That Song?: the Battle for Subramania Bharati's Copyright’ உட்பட தமிழிலும் ஆங்கிலத்திலுமாக இதுவரையில் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியும் பதிப்பித்தும் உள்ளார். தமிழ் வரலாறு, இலக்கியம், பண்பாடு, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் சலபதி வழங்கியிருக்கும் பங்களிப்புக்காக அவருக்கு, 2021-ம்ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இயல்’ விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அறிவித்திருக்கிறது. இத்தருணத்தில் அவருடன் உரையாடியதிலிருந்து...

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x