Published : 27 Aug 2023 07:37 AM
Last Updated : 27 Aug 2023 07:37 AM
திருவாவடுதுறை என்றாலே நாகசுரச் சக்கரவர்த்தி ராஜரத்தினத்தின் பெயரும் சேர்ந்தே மனதில் எழும். பழம்
பெருமைகள் மெல்ல மெல்லத் தமிழர்களின் நினைவில் இருந்து அகன்று கொண்டிருக்கும் வேளையில், ராஜரத்தினத்தின் 125ஆவது பிறந்த நாள், திருவாவடுதுறையின் பெருமையையும் அதனுடன் சேர்ந்து அவர் பெருமையையும் நினைக்கும் வாய்ப்பை நல்கியிருக்கிறது.
மெல்ல மெல்ல மறைந்துவருகிறது என்று குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. சுமார் 10 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்புகூட, சென்னையில் நடைபெறும் இசை விழாக்களில் அவருடைய பெயர் உச்சரிக்கப்படும். அக்கால
கட்டங்களில் அவரை நேரில் கேட்டிருந்த, பார்த்திருந்த ஒரு தலைமுறை இருந்தது. இன்று அவர்களில் ஒருவர்கூட இருப்பாரா என்பது சந்தேகமே. அவர்கள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லர். தமிழகம் முழுவதும், தலைநகர் சென்னையிலும் அவர் வாசிப்பைக் கேட்டவர்கள், சொல்லப்போனால் சென்னையின் இசை உலகுக்கும் தஞ்சை மண்ணுக்குமான தொப்புள் கொடி உறவுக்காரர்களில் முதல், இரண்டாவது தலைமுறையினர்கூட மறைந்துவிட்டனர். ஒரு தலைமுறை அந்த ஊர்ப் பெயர்களைத் தனக்கு முன்னால் சூட்டிக்கொண்டு பெருமைப்பட்டு நிற்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT