Published : 20 Aug 2023 08:42 AM
Last Updated : 20 Aug 2023 08:42 AM
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பொது நூலகத்தில் சிறார்களுக்கான ஒரு பிரிவு எனத் தொடங்கி, படிப்படியாகக் குழந்தைகளுக்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தனி நூலகம் என்கிற சிந்தனை உதித்து விட்டது. தனி நூலகங்களும் உருவாக்கப்பட்டுவிட்டன.
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள நூலகம்தான் உலகிலேயே மிகப் பெரிய குழந்தைகள் நூலகம் என்று சொல்லப்படுகிறது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் ஆறு லட்சம் நூல்கள் இங்கு உள்ளன. கடந்த 2019இல் அந்நூலகம் பொன்விழாவைக் கொண்டாடியது. தொடக்கத்தில் எல்லா நாடுகளிலும் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு அவர்களது பாடத்திட்டத்துக்கு உதவுகிற வகையில்தான் நூலகங்கள், நூலகப் பிரிவுகள் உருவாக்கப்பட்டன. ஆனால், போகப் போக அம்முயற்சி கள் ஒவ்வொரு குழந்தையையும் புரிந்து கொள்வதில், ஒவ்வொருவரின் வாசிப்பு ரசனையை, ஆர்வத்தை, தனிப்பட்ட அவர் களது தேர்வினைப் புரிந்துகொள்வதில் கொண்டுவந்து நிறுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT