Last Updated : 27 Jun, 2023 06:15 AM

 

Published : 27 Jun 2023 06:15 AM
Last Updated : 27 Jun 2023 06:15 AM

ப்ரீமியம்
என்னவாகும் எதிர்க்கட்சிகளின் வியூகம்?

இந்திரா காந்தியின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயண் தலைமையில், அரசியல் அணிசேர்க்கை தொடங்கியதும், அதன் விளைவாக 1977 மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி அரசு படுதோல்வியடைந்ததும் இந்திய அரசியல் வரலாற்றின் முக்கியப் பக்கங்கள். கொந்தளிப்பான இந்தக் காலகட்டத்தில் பிஹார் தலைநகர் பாட்னாவில் 1974 அக்டோபரில் நடந்த பொதுக்கூட்டத்தில், “பிஹாரில் இந்திரா காந்திஅலை ஓய்ந்துவிட்டது” என்று ஜெயப்பிரகாஷ் நாராயண்பேசினார். பின்னர், அது தேசிய அளவிலும் எதிரொலித்தது.

ஏகப்பட்ட திருப்பங்களைக் கொண்ட அந்தக் காலகட்டத்தில், வெவ்வேறு சித்தாந்தங்கள் கொண்ட தலைவர்கள், ஒரே குடையில் அணிதிரண்டனர். அவர்களின் ஒரே நோக்கம், இந்திரா காந்தியை வீழ்த்துவது. ஏறத்தாழ இன்றும் அதே போன்றசூழல் நிலவுகிறது. விசாரணை அமைப்புகளை ஏவித் தங்களை அச்சுறுத்துவதாகக் குற்றம்சாட்டி, மோடி அரசை வீழ்த்த,கொள்கை வேறுபாடுகளைக் கடந்து பல முக்கிய அரசியல் கட்சிகள் அணிதிரண்டிருக்கின்றன. இந்தக் கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் பாட்னாவில் ஜூன் 23 அன்று நடைபெற்றது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x