Published : 25 Jun 2023 07:57 AM
Last Updated : 25 Jun 2023 07:57 AM
தான் நிகழ்த்திய கொடூரங்களை எல்லாம் ஒரு சின்னஞ்சிறிய பெண் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவார் என்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த ஹிட்லர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்!
கடந்த 78 ஆண்டுகளாக வதைமுகாம்களிலிருந்து மீண்டவர்கள் மூலம் ஹிட்லரின் கொடூரங்கள் வெளிவந்துகொண்டே இருந்தாலும், ஒரு சிறுமியின் டயரிதான் இந்த உலகத்தை முதலில் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பிறகே ஹிட்லரின் கொடுமைகளை உலகம் முழுமையாக அறிந்துகொண்டது எனச் சொல்லலாம். ஜெர்மனியில் பிறந்து, நெதர்லாந்தில் வளர்ந்தவர் ஆன் ஃபிராங்க். யூதர்களை ஒடுக்கும் விதத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பித்தார் ஹிட்லர். யூதர் என்பதைத் தெரிவிக்கும் விதத்தில் நட்சத்திரம் அணிந்துகொண்டுதான் வெளியே செல்ல வேண்டும். யூதர்கள் நடத்தும் பள்ளிகளில் மட்டுமே அவர்கள் படிக்க வேண்டும். சில மணி நேரமே திறக்க அனுமதிக்கப்படும் யூதர்களின் கடைகளில் மட்டுமே பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். சைக்கிளை உருட்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும். வாகனங்களில் பயணிக்கக் கூடாது; விளையாடக் கூடாது எனப் பலப் பல கட்டுப்பாடுகள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT