Last Updated : 23 Feb, 2023 06:43 AM

 

Published : 23 Feb 2023 06:43 AM
Last Updated : 23 Feb 2023 06:43 AM

ப்ரீமியம்
மனநலப் பிரச்சினைகள்: அலட்சியத்தால் அதிகரிக்கும் அழுத்தம்

சமீப காலத்தில் சட்டம், சமூகநலன் சார்ந்த விஷயங்களில் மனநல மருத்துவத்தின் பங்கு அதிகரித்துவருகிறது. அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் முதல் தனிநபர்கள்வரை தங்களது கல்வி, வேலைவாய்ப்பு, சட்டம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக மனநல மருத்துவத் துறையை நாடுவது வாடிக்கையாகிவருகிறது; இது வரவேற்கத்தக்கது. எனினும், பெரும்பாலானோருக்கு மனநலப் பிரச்சினைகளைப் பற்றிப் போதிய புரிதல் இல்லை என்பதால், இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

நியாயமற்ற அழுத்தம்: மனவளர்ச்சிக் குறைபாடு, மனச்சிதைவு நோய், இருதுருவ மனநோய் போன்ற தீவிர மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான சான்று வழங்குவது முதல், அரசு வேலைகளில் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சேர்வதற்கான தகுதிச் சான்றிதழ் வழங்குவதுவரை மனநல மருத்துவர்களின் பங்கு முக்கியமானது. ஆனால், மனநல மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தெந்த வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்கிற பட்டியல் மக்களுக்குத் தெரிவிக்கப்படாததால் மனநல மருத்துவர்கள் நியாயமற்ற அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x