Last Updated : 11 Oct, 2022 06:50 AM

 

Published : 11 Oct 2022 06:50 AM
Last Updated : 11 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
தவிர்க்க முடியாத சமரசவாதி

இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர், உத்தரப் பிரதேச அரசியலில் தனக்கும் தனது கட்சிக்கும் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுத்தந்தவர் முலாயம் சிங் யாதவ் (82).

விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுடன் எப்போதும் தொடர்பைப் பேணும் தலைவராக இருந்தார். சோஷலிச தலைவர் ராம் மனோகர் லோஹியாவின் சீடராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய முலாயம், முற்பட்ட வகுப்பினரின் நலன்களை முதன்மைப்படுத்திய காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்டோரை அணிதிரட்டிய அரசியல் தலைவர்களில் முக்கியமானவர். ராம ஜென்ம பூமி விவகாரத்தில், குறிப்பாக பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவராகவும் உயர்ந்தார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரையும் இஸ்லாமியரையும் மதம் கடந்து ஒரு அரசியல் சக்தியாக இணைப்பதில் வெற்றிகரமான முன்மாதிரியை அவர் ஏற்படுத்திக் காண்பித்தார். 1992இல் சமாஜ்வாதி கட்சியைத் தொடங்கினார். கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்களைச் சார்ந்திராமல் தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த முலாயம், மாணவர் அரசியல் தளத்தில் துடிப்புடன் இயங்கிய பிற்படுத்தப்பட்ட, இஸ்லாமிய இளைஞர்கள் பலர் அரசியலில் வளர்வதை உறுதிப்படுத்தினார். முதல்வராக இருந்த காலத்தில் சாலைகள் அமைப்பது, நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்தித் தருவது என கிராமப்புறங்களின் மேம்பாட்டில் அக்கறை செலுத்தினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x