Published : 06 May 2024 10:13 AM
Last Updated : 06 May 2024 10:13 AM

ப்ரீமியம்
பாலியல் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்!

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.பி-யும் முன்னாள் பிரதமர் தேவ கெளடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணா, அவருடைய தந்தையும் சட்டமன்ற உறுப்பினருமான ரேவண்ணா ஆகியோர் மீது எழுந்துள்ள பாலியல் வல்லுறவு, கடத்தல் உள்ளிட்ட புகார்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. அரசியல் தலைவர்கள் இப்படியும் நடந்துகொள்வார்களா என்னும் கேள்வியையும் அவை எழுப்பியிருக்கின்றன.

அரசியல் செல்வாக்கும் பொருளாதார வலுவும் கொண்டவர்களில் ஒரு சிலர், பெண்கள் மீதான பாலியல் குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருவதன் சமீபத்திய உதாரணமாக பிரஜ்வல் - ரேவண்ணா விவகாரம் அமைந்துள்ளது. இதில் ரேவண்ணா கைதுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜெர்மனிக்குத் தப்பிச் சென்ற பிரஜ்வலைப் பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அவரது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பது நம்பிக்கையளிக்கிறது. கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலம் முதல் நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அக்கட்சி போட்டியிடும் இன்றைய காலகட்டம் வரை இப்படியான குற்றங்களில் பிரஜ்வல் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x