Published : 18 Mar 2024 06:20 AM
Last Updated : 18 Mar 2024 06:20 AM

ப்ரீமியம்
அரசியல் கட்சிகள் அறம் பேண வேண்டும்!

தேர்தல் பத்திரங்கள் திட்டம் தொடர்பான தகவல்களை முழுமையாக வெளியிடவில்லை என பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்துக்கு உள்ளான நிலையில், மீண்டும் புதிய பட்டியலைத் தேர்தல் ஆணையத்துக்கு எஸ்பிஐ அனுப்பியிருக்கிறது. அந்தத் தகவல்களும் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன. சர்ச்சைக்குரிய நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது குறித்த விமர்சனங்களை இந்தப் புதிய பட்டியல் மேலும் கூர்மைப்படுத்தியிருக்கிறது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான புதிய ஏற்பாடாக தேர்தல் பத்திரங்கள் திட்டம் 2018இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு, தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்று 2024 பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x