Published : 23 Oct 2023 06:20 AM
Last Updated : 23 Oct 2023 06:20 AM

ப்ரீமியம்
அடுக்குமாடிக் குடியிருப்புகள்: மின் கட்டணத்தில் பாரபட்சம் கூடாது!

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைச் சிறிது குறைத்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது தமிழ்நாடு அரசு. 10 வீடுகளுக்கும், 3 மாடிகளுக்கும் குறைவாக உள்ள, மின்தூக்கி இல்லாத அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மட்டும் பொதுப் பயன்பாட்டு மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8-இலிருந்து ரூ.5.50ஆகக் குறைக்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது. ஒரு தரப்பிலிருந்து வரவேற்பு எழுந்தாலும், இது பாரபட்சமான நடவடிக்கை என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன.

2022இல் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டண முறையை மாற்றி அமைத்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் விளக்கு வசதிகள், நீர் இறைக்கும் மோட்டார்கள், மின்தூக்கிகள் போன்ற பொதுப் பயன்பாட்டுப் பணிகளுக்கான மின்கட்டணங்கள் யூனிட்டுக்கு ரூ.8ஆக அதிகரிக்கப்பட்டது. இதனால், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் அதிருப்தி அடைந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x