Last Updated : 30 Jul, 2023 08:38 AM

 

Published : 30 Jul 2023 08:38 AM
Last Updated : 30 Jul 2023 08:38 AM

ப்ரீமியம்
கதைக்குள் வந்த கடவுள்

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா

எத்தனையோ படைப்புகளில் கடவுள் பற்றிய குறிப்பிருந்தாலும் தமிழில் வெளியான மூன்று கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமானவை. அவற்றுள் ஒன்று, கந்தசாமிப் பிள்ளை; இரண்டாவது, ரிட்டயர்டு ஆபீஸர் சீனிவாசன்; மூன்றாவது விஞ்ஞானி. இந்த மூன்று கதாபாத்திரங்களும் முறையே புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ (நாடகம்), ஜெயகாந்தனின் ‘இல்லாதது எது’ ஆகிய புனைவுகளின் மையக் கதாபாத்திரங்கள்.

இந்த மூன்று கதாபாத்திரங்களுமே கடவுளைப் பார்க்கின்றன. மூன்று பேரும் கடவுளை வித்தியாசமான தருணங்களில், வெவ்வேறு நிலைகளில் கடவுளைப் பார்க்கிறவர்கள். கந்தசாமிப் பிள்ளை முன்பு, சிவனே கதாபாத்திரமாக நேரடியாகத் தோன்றுகிறார். விஞ்ஞானி முன் தன்னைப் பரமாத்மா என்று கடவுள் அறிமுகப்படுத்திக்கொள்கிறார். சுஜாதாவின் ‘கடவுள் வந்திருந்தார்’ நாடகத்தில் கடவுள் பிரசன்னமானார் என்றோ கடவுளைப் பற்றிய வசனங்களோ கிடையாது. மாறாக, ஒருகட்டத்தில் சீனிவாசன் என்கிற மனிதரையே கடவுளின் அவதாரமாகப் பார்வையாளர்கள் பார்ப்பதே நடக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x