Published : 30 Jul 2023 07:30 AM
Last Updated : 30 Jul 2023 07:30 AM

ப்ரீமியம்
பாடித் திரிந்த பாடினிகள்

பழந்தமிழர் பெருமைக்கு இன்றும் கட்டியம் கூறி நிற்பவை நம் சங்கப் பாடல்கள். சங்க காலப் பெண் கவிஞர்கள் பற்றிய ஆய்வினை மேற்கொண்ட ஒளவை நடராசன் 41 பேர் என்று நிறுவுகிறார். எண்ணிக்கையில் குறைவாகவோ கூடுதலாகவோ எப்படி இருப்பினும் தங்கள் படைப்பின் மூலமும் வாழ்க்கையின் மூலமும் ஆண்பால் புலவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே சங்கப் பெண்கவிகள் நிரூபிக்கிறார்கள்.

சங்க காலப் பாடினிகள் அரண்மனைகளில் ஒலித்த பாடல்களை வீதியில் ஒலிக்கவிட்டனர். வீதிகளில் மட்டுமல்ல; வீடுகளிலும் இசைக்கவிட்டனர். வீடுகளில் மட்டுமல்ல, தினைப் புனத்திலும் கம்பங்கொல்லையிலும், சோளக் கொல்லையிலும்கூட ஒலிக்கவிட்டனர். குறுந்தொகையில் 23ஆம் பாட்டில் கட்டுவிச்சி மூலம் பாடுகிறார் ஔவையார்: ‘அகவன்
மகளே அகவன் மகளே / மனவுக் கோப்பு அன்ன நல் நெடுங்கூந்தல்/அகவன் மகளே பாடுக பாட்டே/இன்னும் பாடுக பாட்டே/ அவர் நல் நெடுங்குன்றம் பாடிய பாட்டே’.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x