Published : 17 Sep 2022 10:16 AM
Last Updated : 17 Sep 2022 10:16 AM
தந்தை பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பதினேழு செப்டம்பர், ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்து ஒன்பதில் சென்னை ஜார்ஜ் டவுன் பவளக்காரத் தெருவில் எண் 7 இலக்கமிட்ட வீட்டில் கூடியது திராவிடர் கழகத்தின் மத்திய நிர்வாகக் குழு. அண்ணா, நெடுஞ்செழியன், ஈ.வெ.கி.சம்பத் உள்ளிட்டோரைக் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்புக் குழு, ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ (திமுக) என்ற அமைப்பைத் தொடங்குவதாக மறுநாள் (செப்டம்பர் 18) தெரிவித்தது. அன்று மாலை, ராயபுரம் ராபின்சன் பூங்காவில் ‘திராவிடத்தின் எதிர்கால வேலைத் திட்டம் பற்றி’ நடந்த பொதுக்கூட்டத்தில், திமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா, “திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது” என்று கொட்டும் மழையில் அறிவித்தார். அன்று தொடங்கி 18 ஆண்டுகளில் ‘மதராஸ் ஸ்டேட்’டின் ஆட்சியைப் பிடித்தது திமுக; அண்ணா முதல்வரானார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT